மண்முனைப்பற்று பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2023.04.19 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் உட்பட மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.04.19 01
2023.04.19 02
2023.04.19 03
2023.04.19 04
2023.04.19 05
 
WhatsApp Image 2023 04 09 at 11.39.57
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2023.04.10 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பனையும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 04 10 at 11.39.35 1
WhatsApp Image 2023 04 10 at 11.39.34
WhatsApp Image 2023 04 10 at 11.39.36
WhatsApp Image 2023 04 10 at 11.39.43

பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக்கொண்டாட்டம் - 2023.06.05

பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு 2023.06.05 ஆம் திகதி செவ்வாய்கிழமை சிறுவர் கழகங்களுக்கிடையிலான சித்திரப்போட்டி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டி நிகழ்வில் 58 சிறார்கள் பங்குபற்றியிருந்ததுடன் இதில் வெற்றியீட்டிய சிறார்கள் மற்றும் "வளி மாசடைதலும் அதன் தாக்கமும்" எனும் தலைப்பில் 2023.05.31 ஆம் திகதி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு சான்றிதழ்களும் பங்கு பற்றிய ஏனைய அனைத்து சிறார்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 IMG 20230605 125814 1024x768

IMG 20230605 102605 1024x768

IMG 20230605 130805 1024x768

IMG 20230605 131010 1024x768

IMG 20230605 105625 1024x768

IMG 20230605 110535 1024x768

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரெண்டு மாத வேலைத்திட்டத்தின் வயலும் சோறும் எங்கள் வழக்கம் எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நிகழ்வானது 2023.06.08 ஆம் திகதி வியாழக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை விநாயகர் இறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 12 at 10.10.04 1

WhatsApp Image 2023 06 12 at 10.10.04

WhatsApp Image 2023 06 12 at 10.09.58

WhatsApp Image 2023 06 12 at 10.10.06

WhatsApp Image 2023 06 12 at 10.10.03

பேண்தகு காணி முகாமைத்துவ தினம் - 2023.06.04

பேண்தகு காணி முகாமைத்துவ தினத்தினை முன்னிட்டு 2023.06.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரான்குளம் தொடக்கம் செல்வாநகர் கிழக்கு வரையான கரையோர பகுதிகளில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு கரையோரம் பேணல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 04 at 08.16.32

WhatsApp Image 2023 06 04 at 08.16.32 1

WhatsApp Image 2023 06 04 at 08.16.33

WhatsApp Image 2023 06 04 at 08.16.33 1

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top