News










பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக்கொண்டாட்டம் - 2023.06.05
பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு 2023.06.05 ஆம் திகதி செவ்வாய்கிழமை சிறுவர் கழகங்களுக்கிடையிலான சித்திரப்போட்டி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டி நிகழ்வில் 58 சிறார்கள் பங்குபற்றியிருந்ததுடன் இதில் வெற்றியீட்டிய சிறார்கள் மற்றும் "வளி மாசடைதலும் அதன் தாக்கமும்" எனும் தலைப்பில் 2023.05.31 ஆம் திகதி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு சான்றிதழ்களும் பங்கு பற்றிய ஏனைய அனைத்து சிறார்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரெண்டு மாத வேலைத்திட்டத்தின் வயலும் சோறும் எங்கள் வழக்கம் எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நிகழ்வானது 2023.06.08 ஆம் திகதி வியாழக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை விநாயகர் இறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பேண்தகு காணி முகாமைத்துவ தினம் - 2023.06.04
பேண்தகு காணி முகாமைத்துவ தினத்தினை முன்னிட்டு 2023.06.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரான்குளம் தொடக்கம் செல்வாநகர் கிழக்கு வரையான கரையோர பகுதிகளில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு கரையோரம் பேணல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















