News
நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினம் - 2023.06.03
நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினத்தினை முன்னிட்டு 2023.06.03 ஆம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை வாவி பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினம் - 2023.06.02
உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு 2023.06.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஏத்தாழைக் குளம் சுத்தப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றதுடன் அப்பகுதிக்குரிய மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களினால் சிரமதான நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம் - 2023.06.01
சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினத்தினை முன்னிட்டு 2023.06.01 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சிரமதான நிகழ்வுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.





















