News
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
இணையவழியில்(Online) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் செயன்முறை
விண்ணப்பிப்பதற்கான Link : https://www.immigration.gov.lk/



மண்முனைப்பற்று பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் மகா சங்கத்தினரால் வாழைமரச் செய்கையானது 18.05.2023 ஆம் திகதி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. M.S.F. சஸ்னா அவர்கள் தலைமை தாங்கியதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S.இன்பசாகரன் (கிராம அபிவிருத்தி) அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S.கிரிதரன் (கிராம அபிவிருத்தி) அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஜெயசோதி (விவசாயம்) அவர்களும், விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி. ரேகா அவர்களும் கலந்து கொண்டர். முதலில் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தரால் வாழைமரச் செய்கை தொடர்பாக சங்க அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின் உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் 40 வாழைக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




முதலாவது பொருளாதார புத்தெழுச்சி மற்றும் புதிய கிராமம் புதிய நாடு தொடர்பான கலந்துரையாடல் 2023.05.09 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.30 மணியளவில் மண்முனை 153A கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள், கிராம மட்ட புத்தெழுச்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















