மண்முனைப்பற்று பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் மகா சங்கத்தினரால் வாழைமரச் செய்கையானது 18.05.2023 ஆம் திகதி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. M.S.F. சஸ்னா அவர்கள் தலைமை தாங்கியதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S.இன்பசாகரன் (கிராம அபிவிருத்தி) அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S.கிரிதரன் (கிராம அபிவிருத்தி) அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஜெயசோதி (விவசாயம்) அவர்களும், விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி. ரேகா அவர்களும் கலந்து கொண்டர். முதலில் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தரால் வாழைமரச் செய்கை தொடர்பாக சங்க அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின் உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் 40 வாழைக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















