கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட பன்னிரெண்டு மாத வேலைத்திட்டத்தின் வயலும் சோறும் எங்கள் வழக்கம் எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நிகழ்வானது 2023.06.08 ஆம் திகதி வியாழக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை விநாயகர் இறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















