News
நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு
குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 இற்கான கணக்கெடுத்தல் கட்டத்தினை மேற்கொள்ளும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பு 2024.10.07 தொடக்கம் 2024.10.10 வரையான காலப்பகுதியில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 2024.10.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையால் சுற்றுச்சூழலுக்கு மாத்திரமின்றி மனித உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கப்படுகின்றது என்ற விரிவான விளக்கம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












