செய்திகள்








எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் 19.08.2026 புதன்கிழமை மு. ப 9.00 மணிக்கு பிரதேச செயலக விதாதா வள மண்டபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நடாத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் குருதி அமுக்கம் , நிறை என்பன பார்வையிடப்பட்டது. இதில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதன் போது புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கிட்டு பயிற்சி வகுப்பு 2026




எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை என்பவற்றுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களுக்கான முன்னயத்தங்கள் மற்றும் தயார்படுத்தல் தொடர்பான கூட்டம் 2026.08.19 திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களது தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது எல்-நினோ தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் முன்னாயத்தங்கள் தொடர்பிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலையுடனான முன்னாயத்தங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அனர்த்த முன்னாயத்தங்கள் தொடர்பாக துறைசார் திணைக்களங்களுடனான விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,உட்பட அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கிய பிரதானிகளும் கலந்து கொண்டனர்.
















