පුවත්


2004 ஆம் ஆண்டு சுனாமி இடம்பெற்று 19 வருடங்கள் நிறைவு தினத்தினை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக வளாகத்தில் 2023.12.26 ஆம் திகதி செவ்வாய்கிழமை அன்று மு.ப 9.20 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சுனாமி அனர்த்தத்தின் போது உயிர்நீத்தவர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலியைப் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களால் நிகழ்வு தொடர்பான உரை இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமுள்ள மத தலங்களிலும் பிரார்த்தனையும் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.





























