පුවත්







மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.B.கோகுலராஜன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிறப்பு வியாபார கடன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் வேடர்குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் 4 பயனாளிகளுக்கு பன் உற்பத்திளை ஊக்குவிக்கும் முகமாக பன் அரைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு 29.02.2024 ஆம் திகதி வேடர்குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி M. S.F .சஸ்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S. இன்பசாகரன் (கிராம அபிவிருத்தி பிரிவு), கிராம உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டதோடு, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















