
மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 13.03.2024 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் செல்வாநகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது அதிதிகளை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றதனை தொடர்ந்து பிரதேச செயலாளரால் வரவேற்புரையும் மகளிர் தினம் தொடர்பான பேச்சும் இடம்பெற்றது.
அதன் பின்னர் அப்பிரதேச மக்களால் நடனம், பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றதுடன் பெண் தொழில் முயற்சியாளர்களின் சந்தை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு மகளிர் சங்க உறுப்பினர்களுக்கான விளையாட்டுக்களும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்குமான பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















