
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2024.02.04 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உத்தியோகத்தர்களுக்கு உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தினுள் சிரமதான நிகழ்வு இடம்பெற்றதுடன் பயன்தரு பல்லாண்டு மூலிகை கன்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















