செய்திகள்


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காடாக்கும் நிகழ்வு 2024.08.28 ஆம் திகதி புதன்கிழமை இன்று மு.ப 8.45 மணியளவில் புதுக்குடியிருப்பு தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இதன் போது 2500 பனம் விதைகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொழுநோய்க்கான நடமாடும் பரிசோதனை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2024.08.17 ஆம் திகதி சனிக்கிழமையன்று மு.ப 8.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் 2024.08.12 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பரமநயினார் இளைஞர் கழகத்தினால் மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













