පුවත්
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரனையுடன் புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொரோனாவில் இருந்து பொதுமக்களையும், உத்தியோகத்தர்களையும் தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக கொரோனா தொற்றிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் செல்வி.ஜெ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றில் இருந்து தன்னை தானே எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கொரோனா தொற்றுக்குள்ளான உத்தியோகத்தர் ஒருவர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இதன்போது வைத்தியர்களினால் தொழிவூட்டப்பட்டதுடன், உத்தியோகத்தர்களுக்கு துண்டுப் பிரசுரங்களும், உடற்தேற்றி குடிநீர் தயாரிப்பதற்கான மூலிகை கலவையும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.
இதன் போது உத்தியோகத்தர்களுக்கான உடற்தேற்றி குடிநீர் தயாரிக்கும் மூலிகை கலவை அடங்கிய பொதிகள் வைத்திய அத்தியட்சகரினால் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.



மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் இன்று 19.05.2020 ஆந் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 11.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
சுகாதார முறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்ற இக் கலந்துரையாடலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.துமிந்தநளனசிறி, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி கே.ரமேஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலின் போது கொரோனா தொற்றிலிருந்து மண்முனைப்பற்று பிரதேச மக்களை எவ்வாராக தொடர்ந்தும் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாயல்களின் எவ்வாறாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும், டெங்கு நிலை தொடர்பில் பொது மக்களை எவ்வாறாக வழிநடத்த வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கொரோனா சூழ்நிலையில் மக்களுக்காக பணியாற்றிவரும் இராணுவ உயரதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஏனைய திணைக்களகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.




பிரதேச செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான ஏற்பாடுகள் எமது பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலில் இன்றிலிருந்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.
இந்த நடைமுறையானது தொடர்ச்சியாக தினமும் அலுவலக வாயிலில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.






















