மகா சிவராத்திரி விழா - 2025
மேற்படி சிவராத்திரி விழாவானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களது ஆலோசனைக்கமைய 26.02.2025 பி.ப 7.30 மணிக்கு தாழங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சேனைத்தெரு ஸ்ரீ வீரம்மா காளியம்மன் ஆலய முன்றலில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு. S. திவாகரன் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
இவ் விழாவானது ஆலய பிரதம குருவின் ஆசியுடன், நிருவாக உத்தியோகத்தரின் தலைமையுரை, ஆலய நிர்வாகத்தின் உரை என்பனவற்றோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.












