ஜனாதிபதி செயலகத்தில் செயற்படுத்தபடும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தின் கீழ் மாவட்ட வாழ்கைத் தொழில் மத்திய நிலையங்களை நிறுவும் பணி தொடர்பாக எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் நிலையங்களில் பதிவு செய்து CAREERKEY TEST செய்வதன் மூலம் அவர்களது துறைகளை எவ்வாறு தெரிவு செய்யலாம் எனவும் இதன்போது கூறப்பட்டது.
மாவட்ட செயலக தொழில்வழிகாட்டல் நிலைய உத்தியோகத்தர்களால் இக்கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















