மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகர் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு சங்காபிஷேக நிகழ்வு 12.06.2019 வெள்ளிக்கிழமை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
108 சங்காபிஷேக சிறப்பு யாக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 10 குடும்பங்களிற்க்கு உலர் உணவுப்பொருட்களும், 05 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.
அதே போன்று ஆண்டுதோறும் இடம்பெறும் அன்னதான நிகழ்வும் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


















