மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக உத்தியோகத்தராக திரு. சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்கள் 10.08.2026 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷண கௌரி தினேஷ் அம்மணி அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றதுடன், முன்னாள் நிர்வாக உத்தியோகத்தரான திரு. வேலாயுதம் தவேந்திரன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார்.
புதிய நிர்வாக உத்தியோகத்தரான திரு. சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்களுக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களின் சார்பிலும் அன்பான வரவேற்பையும், மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.















