மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வதேச சிறுவர் தின முதியோர் வார நிகழ்வு
"உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" "எமது மரியாதைக்குரிய முதியோர்கள்" என்ற தொனிப் பொருளில் 2025.10.03 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச முதியோர்களும் சிறுவர்களும் கலந்து சிறப்பித்ததோடு பிரதேச செயலக கணக்காளர், மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக இணைப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வை சிறப்பிக்க பாலர் பாடசாலை மாணவர்களால் போஷாக்கான உணவுக் கண்காட்சி, சிறுவர் முதியோர்களது கலை நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று நடாத்தப்பட்டதுடன் ஊற்று கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றதோடு இறுதியாக சான்றிதழ்களும் பங்குபற்றிய சிறுவர் முதியோர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

















