இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 2025
மண்முனைபற்று பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்று (2025.06.27) மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ.கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றினர்.
















