கண்ணப்ப நாயனார் குரு பூசை தினம் 09.02.2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா அன்னை சாரதா அறநெறி பாடசாலை மற்றும் சிவதொண்டர் திருக்கூடத்து இணைந்து நடாத்திய கண்ணப்ப நாயனார் குருபூசையானது தாழங்குடா -02 கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதலில் தாழங்குடா -03 சந்திமாரியம்மன் ஆலயத்திலிருந்து பூசை, ஊர்வலத்துடன் ஆரம்பமாகி தாழங்குடா -02 சித்தி விநாயகர் ,கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது , தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு ,பிரதம அதிதி உரை அத்துடன் இணைந்த வகையில் உருத்திராக்கம் அணிவித்தல், சான்றிதழ் , பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.





















