
மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கலாசார அதிகார சபை மற்றும் கலாசார பேரவை இணைந்து நடத்திய பிரதேச இலக்கிய விழா 2023.11.23 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய "கண்ணகி அரங்கு" ஒன்று கூடல் மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் மாணவர்களால் கிராமிய நடனம் ஆடப்பட்டு சம்பிரதாய பூர்வமாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து கதிரவன் பட்டிமன்றத்தின் 120 ஆவது பட்டிமன்றம், மாணவர்களின் கிராமிய நடனம், கதைகூறல், தனிஇசை, கிராமிய இசை எனப் பல நிகழ்வுகளும் பிரதேச இலக்கிய விழா போட்டியில் பாடசாலை மற்றும் திறந்த பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















