கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்கில் நடத்திய மாகாண மட்ட பாடல் போட்டியில் பங்குபற்றி சிறப்பாக தன் பாடும் திறமையினை வெளிக்காட்டி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கிழக்கின் கான இளவரசன் என்ற பட்டத்தினைப் பெற்று எமது பிரதேச செயலகத்திற்கு பெருமையினை பெற்றுத்தந்த எமது பிரதேச செயலக உளவள துணை உத்தியோகத்தர் திரு. தருமரெத்தினம் நிஷாந்தன் அவர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்















