மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஆலோசனையில் கைறாத் கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் வசந்தம் நிகழ்வு ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மன்பஉல் கைறாத் ஜும்ஆ பள்ளிவாயலில் 2023.09.25 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று பி.ப 4.30 மணிக்கு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
கைறாத் கலை கலாசார மன்ற தலைவர் ஜனாப் M.I.M.நஷீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் உதவி பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் திரு. த.மலர்ச்செல்வன், கலாசார உத்தியோகத்தர் திருமதி. ராதிகா கருணாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் A.L முசாதிக், கைறாத் கலைக்கழக உறுப்பினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கவிதை, பாடல், பேச்சு போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வை பிரதேச கலாசார பேரவை மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 09 27 at 11.11.38 1
WhatsApp Image 2023 09 27 at 11.11.38
WhatsApp Image 2023 09 27 at 11.11.38 2
WhatsApp Image 2023 09 27 at 11.11.39
WhatsApp Image 2023 09 27 at 11.11.41

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top