மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வானது 2023.09.26 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் காக்க உதிரம் கொடுத்து இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















