சமூக சேவை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடமாடும் சேவை மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 2023.09.23 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் மட்/மட்/ மாவிலங்கதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலகம் சார்ந்த சமூக சேவை தொடர்பான சேவைகள், சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான சேவைகள், காணி உரிமம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு தொடர்பான சேவைகள், தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள், சிறுவர், பெண்கள் மற்றும் முன்பருவபிள்ளைகள் தொடர்பான சேவைகள், சுகாதார வைத்திய அலுவலகம் சார்ந்த சேவைகள், சுதேச மருத்துவ சேவைகள், ஆயுள்வேத வைத்தியம் தொடர்பான சேவைகள் போன்றன வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















