
கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஆலோசனைக்கு அமைவாக ஒவ்வொரு கலைக்கழகமும் மாதம் ஒருமுறை ஒவ்வொரு நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கதிரவன் கலைக்கழகத்தினால் மண்முனைப்பற்று பிரதேச கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு மட்/தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள மீனாட்சி மரத்தடி முன்றலில் 10.09.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர், கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கலாசார பேரவை உறுப்பினர்கள், கதிரவன் பட்டிமன்ற பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்ததுடன் கலைஞர்கள் தங்களது அனுபவப் பகிர்வுடன் சிறப்பான முறையில் தங்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.















