சமூக நலன்புரி நன்மைகள் பெற்றுக் கொள்ள தகுதியானவர்களை அடையாளம் காணல்
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளத் தகுதியான நபர்களை அல்லது குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கள ஆய்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வருகை தரவுள்ளனர். அவ்வாறு வருகை தரும் போது பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் கணக்கெடுப்பிற்கு தேவைப்படும் தகவல்களை வழங்கி அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
1.அடையாள அட்டை
2.வங்கிக்கணக்கு புத்தகம்
3.மின்சாரப்பட்டியல், நீர்ப்பட்டியல்
4.சமுர்த்தி கணக்கு புத்தகம் இருப்பின்
5.பொதுசன மாதாந்த உதவிப்பண அட்டை இருப்பின்
6.முதியோர் கொடுப்பனவு அட்டை இருப்பின்












