சௌபாக்கியா வார வேலைத்திட்டம் நாடு பூராகவும் 2022.03.24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில், பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீட்டினை கையளித்ததுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. S.P.R. பரீட், சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





















