சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்" எனும் கருப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2022.03.08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு பாலமுனை நடுவோடை கடற்கரை பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக கவிதை, தனிப்பாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண் தலைமைத்துவத்தினை கௌரவிக்கும் முகமாக பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை உதவியாளர்களுக்கு பூச்செண்டுகளும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.























