கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பனம் பொருள் கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபடும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் இன்று (08) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 20 சுயதொழில் முயற்சியாளர்களுக்கும் தலா பதினைந்தாயிரம் பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் கலந்து கொண்டு இவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.














