எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடாத்தப்பட்டுவரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் "சிறுதுளி" நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
எமது பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவும் தகவல் தொடர்பாடல் பிரிவும் இணைந்து இதன்போது ஆற்றுகை செய்திருந்தனர்.
பாடும் திறனுள்ள உத்தியோகத்தர்களால் பாடல்கள் பாடப்பட்டதுடன், இரு பிரிவினரும் இணைந்து நாட்டிய நாடகம் ஒன்றினையும் அரங்கேற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி உள்ளிட்ட கிளைத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















