டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் 01.01.2020 ஆந் திகதி புதன்கிழமை பி.ப 12.00 மணிக்கு எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து டெங்கு அபாய நிலையினை மிக விரைவில் நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை செயற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














