மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் மற்றும் செல்வாநகர் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விரிப்புகள் (ரென்ட்) வழங்கிவைக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வானது செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான விரிப்புகளை வழங்கிவைத்தார்.
இதன் போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி உட்பட கிராம உத்தியோகத்தர்களான திரு.கோ. பஞ்சாட்சரம், திரு. நிறோசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















