மண்முனைப்பற்று பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்களால் எழுதப்பட்ட " ஊற்று கையொழுத்து சஞ்சிகையினை " மதிப்பிற்குரிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் மகளிர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














