மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டத் திணைக்களமும் இணைந்து நடாத்திய பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா பாலமுனை நெஷனல் விளையாட்டு மைதானத்தில் மண்முணைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் (22) வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு கழகங்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைப்பதனையும், இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதனையும் படங்களில் காணலாம்.




























