எமது பிரதேச செயலகத்தில் வாணி விழா விசேட பூஜை இன்றைய தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள விநாயகர் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்புற நடைபெற்றது.
எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் அவர்களது பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது எமது செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
பூஜைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உத்தியோகத்தர்களின் பஜனையும், அதனைத் தொடர்ந்து அறநெறி மாணவர்களின் அழகிய நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

























