யோகா விழிப்புணர்வு நிகழ்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 25.06.2025 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு மண்முனைப்பற்று நந்தகோபன் மண்டபத்தில் சர்வதேச யோகா மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக யோகா விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் ஆரையம்பதி மகாவித்தியாலய மாணவர்களுக்குமாக நடாத்தப்பட்டது. இதில் 44 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
















