சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை 2025
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2025.04.09ஆம் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. எமது நிருவாக உத்தியோகத்தர் திரு.சி.திவாகரன் ஐயா அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்வானது ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.












