மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு வீட்டிற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 2024.08.23 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












