குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் காங்கேயனோடை, காங்கேயனோடை தெற்கு, ஆரையம்பதி தெற்கு, ஆரையம்பதி 01, ஆரையம்பதி 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அரிசி விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.













