இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.03 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















