மண்முனைப்பற்று பிரதேச செயலகம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு 2023.09.21 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு கடற்கரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு மற்றும் புதுக்குடியிருப்பு தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமை புரியும் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என 300 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















