
அவுஸ்ரேலிய சைவ மன்றம் நன்கொடையாக வழங்கிய நிதியினைக் கொண்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 10 பயனாளிகளுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கான குழாய்கிணறுகளை நிர்மாணித்து சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2023.09.06 ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்கள் கலந்து கொண்டு குழாய்க்கிணற்றினை திறந்து வைத்ததுடன் உரிய பயனாளியிடம் ஒப்படைத்தார். அத்துடன் இந்நிகழ்வில் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திருமதி. தயனி கிருஸ்ணாகரன், சமூக நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர். மேலும் சமூக நலன்புரி அமைப்பிற்கு அவுஸ்ரேலிய சைவ மன்றமானது வருடாந்தம் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதற்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














