மண்முனைப்பற்று சர்வ மத ஒன்றியம் ஒன்றியத்தின் (கரித்தாஸ் - எகெட்) அனுசரனையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11 பாடசாலைகளைச் சேர்ந்த 44 மாணவர்களுக்கான தலைமைத்துவ (போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு) கருத்தரங்கு 2023.02.08 ஆம் திகதி புதன்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்றது. வளவாளராக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிரேஷ்ட உளநல வைத்தியர் Dr. யூடி ரமேஷ் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















