
மட்டக்களப்பு மாவட்டத்தில் Transparency International Sri Lanka நிறுவனமானது LIFT நிறுவனத்துடன் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்றை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.04.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
இலஞ்ச ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு மக்களோடு தொடர்புபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Transparency International Sri Lanka நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் பிரியா போல்ராஜ், உத்தியோகத்தர்களான கசுல் ரணசிங்க, ரகுமான் ஆகியோர் வளவாளர்களாகவும் LIFT நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் தனுஜா, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தருக்கான நிர்வாக உத்தியோகத்தர், பதவி நிலை உதவியாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















